For Daily Alerts
Just In
குரூப் 1 தேர்வு - 74 பணியிடங்களுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்!
சென்னை: தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி முடிவடைந்தது. தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கான குரூப் தேர்வுகளை டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் நடத்தி வருகின்றது.
இந்த குரூப் 1ல் உள்ள 74 பணியிடங்களுக்கு 2 லட்சத்து 22 ஆயிரத்து 771 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பித்தவர்கள் முதலாவதாக முதலில் முதல் நிலை தேர்வு எழுதவேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின்தேர்வை எழுதுவார்கள். அதிலும் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
மெயின்தேர்விலும், நேர்முகத்தேர்விலும் அதிக மதிப்பெண் எடுப்பவர்கள் அதிகாரிகளாக தேர்ந்து எடுக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments
English summary
Group 1 exam application closed. for 74 postings, 2 lakhs 22 thousand 771 people applied.
Story first published: Tuesday, August 11, 2015, 9:41 [IST]