ஏர்போர்ட்டில் 'நா.சா' மீண்டும் பிரசங்கம் - மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தல்!
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் மத்திய அமைச்சராக இருந்த நாராயணசாமி சென்னைக்கு எப்போது வந்தாலும் விமான நிலையத்தில் தவறாமல் செய்தியாளர்களை சந்தித்து வந்தார். லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திப்பதை நாராயணசாமி தவிர்த்து வந்தார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்ய வேண்டும். இதற்கு நிதி இல்லை என தமிழக அரசு கூறுவது சரியல்ல.
தங்களது தொகுதி எம்.எல்.ஏ. சட்டசபையில் பேசுவதை மக்கள் நேரடியாக பார்த்துக் கொள்ள இது உதவும். சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை அதற்கென அமைக்கப்பட்ட குழு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.