ஆத்தூர் தொகுதியில் படு தோல்வி அடைவார் நத்தம் விஸ்வநாதன்- நியூஸ் 7 கருத்துக் கணிப்பு
சென்னை: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டசபைத் தொகுதியில் மாநில அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் படு தோல்வி அடைவார் என்று நியூஸ் 7 - தினமலர் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
நேற்று மேற்கு மண்டலத்திற்கான கருத்துக் கணிப்பு முடிவுகளை அறிவித்தது நியூஸ் 7- தினமலர். இன்று தெற்கு மண்டலத்துக்கான முடிவுகளை இந்த நிறுவனங்கள் இன்று வெளியிட்டன.
இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் திமுகவுக்கு 5 தொகுதிகளிலும், அதிமுக
வேடசந்தூர் தொகுதியில் மட்டும் வெல்லும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரத்தில் இரண்டு கட்சிகளும் சம நிலையில் உள்ளன.
அதிமுகவுக்கு இங்கு கிடைக்கும் மிகப் பெரிய தோல்வியாக ஆத்தூர் உள்ளது. இங்கு மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் போட்டியிடுகிறார். இதை பனிஷ்மென்ட் தொகுதியாக நத்தம் ஆதரவாளர்களே கூறுகின்றனர். இந்த நிலையில் இங்கு மிகப் பெரிய அளவிலான தோல்வியை அதிமுக பெறும் என்று கருத்துக் கணிப்பு கூறியுள்ளது.
இங்கு 17 சதவீதம் பேரே அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேசமயம், திமுகவுக்கு கிடைத்துள்ள ஆதரவு 69 சதவீதமாகும். தேமுதிகவுக்கு இங்கு 6.5 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.
நத்தம் விஸ்வநாதனுக்கு வெற்றி வாய்ப்பு குறைவு என்பது ஏற்கனவே கணிக்கப்பட்ட ஒன்றாகும். ஆனால் இங்கு அவர் படு தோல்வி அடையக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக நியூஸ் 7- தினமலர் கருத்துக் கணிப்பு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்