விமான நிலையத்துக்கு லேட்டாக வந்த நயன்தாரா.. சூட்கேஸ்களை ஏற்ற அதிகாரிகள் மறுப்பு!
சென்னை: நடிகை நயன்தாராவின் சொந்த ஊர் கேரள மாநிலத்திலுள்ளது. கிறிஸ்தவரான நயன்தாரா, கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்காக தனது சொந்த ஊர் செல்ல முடிவு செய்தார். இதையொட்டி நேற்று காலை 10.30 மணி விமானத்தில் ஏற அவர் சென்னை விமான நிலையம் வந்துள்ளார்.
ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்குள் ஏர்போர்ட்டுக்கு வராமல், காலதாமதமாக வந்துள்ளார், நயன்தாரா. அவருடன் மொத்தம் 5 சூட்கேசுகளையும் கொண்டுவந்துள்ளார்.
ஆனால் சூட்கேசுகளை ஏற்ற நேரமில்லாத காரணத்தால், அவற்றை விமானத்திற்குள் அனுமதிக்க முடியாது என்று விமான ஊழியர்கள் மறுத்துள்ளனர். அவர்களிடம் நயன்தாரா சமாதானம் கூறியும் சூட்கேசுகளை ஏற்ற அவர்கள் மறுத்து விட்டனர். இதனால் தவித்தப்படி நின்றார் நயன்தாரா.
இதனிடையே நயன்தாரா கொண்டுவந்த கைப்பையை மட்டும் விமானத்தில் கொண்டு செல்ல ஊழியர்கள் அறிவுறுத்தினர். வேறு வழியில்லாமல் கைப்பையுடன் கொச்சி கிளம்பினார் நயன்தாரா. எடுத்து வந்திருந்த 5 சூட்கேசுகளையும் காரிலேயே சென்னை வீட்டுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.
விமான ஊழியர்களுடன், நயன்தாரா வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.