For Daily Alerts
Just In
மீனவரின் வீடு புகுந்து 200 சவரன் நகை கொள்ளை! கூடங்குளம் அருகே பரபரப்பு
நெல்லை: கூடங்குளம் அருகே இடிந்தகரையில், மீனவரின் வீடுபுகுந்து 200 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகேயுள்ளது இடிந்தகரை. இந்த ஊரை சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ் ராயன். மீனவர். இன்று காலை குடும்பத்தோடு, தேவாலயத்துக்கு சென்றார்.
அவர் வீடு திரும்புவதற்குள் மர்ம நபர்கள் வீடு புகுந்து அங்கிருந்த 200 சவரன் நகைகளை கொள்ளையடித்து தப்பியோடிவிட்டனர். வீடு திரும்பிய ஆண்ட்ரூஸ் குடும்பத்தார், அதிர்ச்சியடைந்து கதறி துடித்தனர்.
இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நகைகளை தனது மகள் திருமணத்திற்காக ஆண்ட்ரூஸ் சேர்த்து வைத்திருந்ததாக தெரிகிறது.
Comments
English summary
200 sovereign gold jewellery stolen from a fisherman house in Idinthakarai near Koodangulam, in Nellai district.
Story first published: Wednesday, May 27, 2015, 7:51 [IST]