நீங்கள் அரசியலில் பிழைக்க தமிழ் மகளை ஏன் துணைக்கு அழைக்கிறீர்கள்...நாஞ்சிலை வாங்கும் நெட்டிசன்ஸ்
தினகரனை புகழ்ந்து பாடி நாஞ்சில் சம்பத் வெளியிட்டுள்ள பதிவுக்கு இணையதளவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: ஆர்கே.நகர் வேட்பாளரான டிடிவி தினகரனுக்கு ஆதரவாகவும் அவரை புகழ்ந்து தள்ளியும் நாஞ்சில் சம்பத் தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில் ஒரு துப்பாக்கியின் ஓசையை விட அதிகமாகவும் , ஒரு பூகம்பத்தின் சீற்றத்தை விட வேகமாகவும் இயங்கும் இயல்புடையவர் தினகரன் என்ற நாஞ்சில் சம்பத் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவை படித்த நெட்டிசன்கள் கொதித்துள்ளனர்.
நாஞ்சில் சம்பத்தை சரமாரியாக வசைபாடியுள்ளனர். அவற்றில் சில பதிவுகள் இதோ உங்கள் பார்வைக்கு..
எதற்கும் ஒரு லிமிட் இருக்கிறது
'ஒரு துப்பாக்கியின் ஓசையை விட அதிகமாகவும் , ஒரு பூகம்பத்தின் சீற்றத்தை விட வேகமாகவும் இயங்கும் இயல்புடையவர் தினகரன்' இதுகொஞ்சம் அதிகம் சார்... ஒருவரை புகழவும் ஒரு அளவு உள்ளது. இதுப்போன்ற முட்டாள் வார்த்தைகளை எதிர்பார்க்கவில்லை..
டெபாசிட் கிடைக்குமா
தினகரனுக்கு டெபாசிட் கிடைக்குமா என கேட்டுள்ளார் இந்த வலைஞர்
தினகரன் மீதான வழக்குகள்
தினகரன் மீதுள்ள கேஸ்களை பட்டியலிட்டுள்ளார் இந்த வலைவாசி
ராணி தேனியா
ராணி தேனியா.. என்ன சொல்ல வர்றீங்க மிஸ்டர் சம்பத்...
மக்களை ஏன் அழைக்கிறீர்கள்
நீங்கள் அரசியலில் பிழைக்க தமிழ் மகளை ஏன் துணைக்கு அழைக்கிறீர்கள்...
தொண்டர்கள் மட்டுமே நினைக்கிறார்கள்
தொண்டர்கள் மட்டுமே ஜெயலலிதாவை நினைத்துப் பார்க்கிறார்கள்..