சட்ட படிப்பில் இளவரசி மகன் விவேக் ஃபிராடு? போட்டுக் கொடுத்ததா திவாகரன் தரப்பு?
சட்ட பல்கலைக் கழக படிப்பில் இளவரசி மகன் விவேக் முறைகேடு செய்தது தொடர்பாக விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: சட்ட பல்கலைக் கழகப் படிப்பில் இளவரசி மகன் விவேக் முறைகேடு செய்துள்ளதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இளவரசி மகன் விவேக் மீதான விசாரணையால் திவாகரன் தரப்பு ரொம்பவே மகிழ்ச்சியடைந்து போயுள்ளதாம்.
சசிகலா குடும்பத்தில் இளவரசி மகன் விவேக், திவாகரன் மகன் ஜெயானந்த் இடையேயான போட்டிதான் ரொம்பவே விறுவிறுபாக நடைபெற்று வருகிறது. அதிமுகவில் தினகரன் கை ஓங்கிய நிலையில் விவேக்கும் ஜெயானந்தும் பெங்களூருவுக்கு சென்று சசிகலாவிடம் மாறி மாறி முறையிட்டு வருகின்றனர்.
விவேக் vs ஜெயானந்த்
சசிகலாவோ விவேக்கை கொஞ்சம் அதிகமாகவே நம்புகிறாராம்.. என்னதான் திவாகரன் மகன் ஜெயானந்த் கொண்டு போய் கொடுக்கும் டிரான்ஸ்பர் உள்ளிட்ட சிபாரிசுகள் எதனையும் சசிகலா கண்டுகொள்வதே இல்லையாம். இதில் திவாகரன் தரப்பு ரொம்பவே அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.
சர்ச்சையில் விவேக்
இந்த நிலையில் விவேக் சென்னை சட்டப் பல்கலைக் கழகத்தில் தேர்வுகளை எழுதியதாக ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. சட்டப் பல்கலைக் கழகம் பக்கமே எட்டிப்பார்க்காத விவேக் எப்படி தேர்வு எழுதியிருக்க முடியும்? என்பதுதான் கேள்வி.
விசாரணைக்கு உத்தரவு
இது தொடர்பாக ஆளுநருக்கும் புகார் போனது. இதையடுத்து விவேக் மீதான புகார் குறித்து விசாரிக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். இந்த தகவல் திவாகரன் தரப்பை ரொம்பவே மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளதாம்.
கருப்பு ஆடு யாரு?
அதேநேரத்தில் விவேக் தரப்போ, தம்மை பற்றி போட்டுக் கொடுத்த கருப்பு ஆடு யார் என்பது குறித்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது. அவர்களைப் பொறுத்தவரை திவாகரன் தரப்புதான் போட்டுக் கொடுத்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கிறார்களாம்.