ஆரஞ்சு, வெள்ளை, பச்சை வண்ணம்.. நடுவில் காமராஜர், மூப்பனார்.. இதுதான் வாசன் கட்சியின் கொடி!
சென்னை: சென்னையில் இன்று ஜி.கே.வாசனின் புதிய கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது.
கடந்த மாதம் காங்கிரஸிலிருந்து விலகிய ஜி.கே.வாசன், புதிய கட்சி தொடங்கப் போவதாக நவம்பர் 3 ஆம் தேதி அறிவித்தார். கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை வரும் 28 ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் அறிவிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கட்சித் தொண்டர்களின் கோரிக்கையால் இன்றே கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார் ஜி.கே.வாசன். இன்று காலை மயிலாப்பூரில் சாந்தோமில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில் வாசன் புதிய கட்சிக் கொடியானது அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆரஞ்சு, வெள்ளை, பஞ்சை வண்ணக்கொடியின் நடுவில் காமராசர், மூப்பனர் படங்களை கொண்டதாக அந்த கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் திருச்சியில் நடைபெறும் கூட்டத்தில் கட்சிப் பெயர் அறிவிக்கப்படுவதாக ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்