For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருமணம் முடித்த கையோடு ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு காளையோடு வந்த மணமக்கள்!!

ஈரோட்டில் திருமணத்தை முடித்த கையோடு புதுமண தம்பதி ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த சம்பவம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோட்டில் இன்று திருமணத்தை முடித்த புதுமண தம்பதியினர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்துகொண்டனர். இந்தப் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் நடைபெற்று வருகின்றது. ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் இன்று திருமணம் முடித்த கையோடு மணமக்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்துகொண்டனர். மாட்டின் மூக்கணாங்கயிரை பிடித்துக் கொண்டு அவர்கள் போராட்டம் நடத்தினர்.

புதுமண தம்பதி மணக்கோலத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஈடுபடும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வலம் வருகிறது.

English summary
Newly married couple participated in Jallikattu protest in Erode. Their photo with bull is floating on internet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X