For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான்தான் அவுங்கள நீக்கிட்டேனே, அவுங்க என்னை எப்படி நீக்க முடியும்? கேட்கிறார் கருணாஸ்!

என்னை கட்சியில் இருந்து நீக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது என்று எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸ் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: முக்குலத்தோர் புலிப்படையில் இருந்து என்னை நீக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது என்று திருவாடாணை எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸும் தெரிவித்தார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட அணுகியது. அப்போது கூட்டணி அமைக்க ஒப்புதல் தெரிவித்த ஜெயலலிதா இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று கராராக தெரிவித்தார்.

No one has right to sack me from party, says Karunaas

இந்நிலையில் கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்படுவதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு அவர் அனைத்து நிர்வாகிகளையும் நீக்கினார். இதைத் தொடர்ந்து முக்குலத்தோர் புலிப்படையில் இருந்து எம்.எல்.ஏ. கருணாஸ் நீக்கப்பட்டுள்ளதாக மதுரையில் புலிப்படை செயலாளர் பாண்டித்துரை, துணைத் தலைவர் சந்தானகுமார் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.

இதுகுறித்து கருணாஸ் தெரிவிக்கையில், கட்சியின் விதிகளை மீறி செயல்படுவதாக நான் ஏற்கெனவே அனைத்து நிர்வாகிகளையும் நீக்கிவிட்டேன். எனவே நீக்கப்பட்ட அவர்கள் என்னை நீக்க முடியாது. என்னை கட்சியிலிருந்து நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்று கருணாஸ் தெரிவித்தார்.

English summary
Thiruvadanai MLA Karunaas says he already sacked all his party's members. so the no one has the right to sack me from Mukkulathor Pulippadai party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X