குஷ்பு-நக்மா இடையே எந்த மோதலும் இல்லையே... அடித்து சொல்லும் திருநாவுக்கரசர்
காங்கிரஸில் உள்ள நடிகைகள் குஷ்பு மற்றும் நக்மா இடையே எந்த மோதலும் இல்லை என திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னை: காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு மற்றும் மகிளா காங்கிரஸ் பொதுச்செயலர் நக்மா இடையே எந்த ஒரு மோதலும் இல்லை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் விளக்கம் அளித்துள்ளார்.
காங்கிரஸில் திரைநட்சத்திரங்களான நடிகைகள் நக்மா மற்றும் குஷ்புவுக்கு தேசிய அளவில் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் 2 பேரும் தமிழக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது முகத்தை திருப்பி வைத்துக் கொண்டு பரம எதிரிகளாக நடந்து கொள்கின்றனர்.
அண்மையில் இஸ்லாமியர்களின் முத்தலாக் பற்றி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் குஷ்பு. இதற்கு நடிகை நக்மா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனால் இருவருக்கும் இடையேயான மோதல் பகிரங்கமாக வெடித்தது.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், குஷ்பு- நக்மா இடையே எந்த ஒரு மோதலும் இல்லை. குஷ்புவுக்கு எதிராக எந்த கருத்தையும் நக்மா தெரிவிக்கவில்லை.
அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து வரும் 11-ந் தேதி முதல் பிரசாரம் செய்வோம் என்றார்.