For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யாரை "யானை" என்று சொல்கிறார் நாஞ்சில் சம்பத்!!

Google Oneindia Tamil News

காரைக்குடி: ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதவது...

சுப்பிரமணிய சுவாமிக்கு மேல் முறையீடு செய்ய உள்ள உரிமையை நான் மறுக்கவில்லை. ஆனால் அங்கேயும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்.

NObody can win Jayalalitha at anywhere, says Nanjil Sampath

பா.ம.க., சார்பில் ஜி.கே.மணி, பெங்களூரு சென்று, அம்மாநில முதல்வர் சித்தாராமையாவை சந்தித்து, ஜெ.வழக்கில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று, வற்புறுத்தியுள்ளார்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று, கர்நாடகா முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஏன் இவ்வளவு தாமதம் என கருணாநிதி ஆதங்கப்படுகிறார்.

அரசியல் ரீதியாக ஜெ.,வை பழிவாங்க நினைத்தவர்களுக்கு, அது முடியாமல் போனதன் விளைவு, அடுத்த கட்டத்துக்கு தாவ துடிக்கிறார்கள்.

மேல் முறையீடுக்கு கர்நாடகாவுக்கு படையெடுப்பவர்கள். மேக தாது அணை கட்டும் விவகாரத்தில் படையெடுத்ததுண்டா. எலிகளெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் யானையை ஒன்றும் செய்ய முடியாது. யானை பயணத்தை தொடங்கிவிட்டால் எலிகள் சிதறி ஓடிவிடும் என்று அவர் கூறியுள்ளார்.

சரி, யானை என்று அவர் யாரைச் சொல்கிறார்??

English summary
ADMK speaker Nanjil Sampath has said that nobody can beat Jayalalitha even if they go to Supreme Court
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X