For Daily Alerts
Just In
அதிமுக அணிகள் இணைப்பு தொடர்பாக இன்று மாலை அறிவிப்பு- பொறுத்திருந்து பாருங்க.... ஓபிஎஸ்
அதிமுக அணிகள் இணைப்பு தொடர்பாக இன்று மாலை அறிவிக்கப்படும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுக அணிகள் இணைப்பு தொடர்பாக இன்று மாலை அறிவிக்கப்படும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் அணி முன்வைத்த கோரிக்கைகளான ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களா நினைவில்லம், தினகரனை நீக்குவது ஆகிய கோரிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் நிறைவேற்றியுள்ளனர். இதையடுத்து அதிமுகவின் இரு அணிகளும் எந்த நேரத்திலும் இணையலாம் என கூறப்பட்டு வருகிறது.
ஆனால் ஓபிஎஸ் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை என வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், இரு அணிகள் இணைப்பு தொடர்பாக இன்று மாலை அறிவிக்கப்படும்; பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.
Comments
English summary
Former Chief Minsiter O Panneerselvam will announce their decision today on the AIADMK factions merger.
Story first published: Friday, August 18, 2017, 10:49 [IST]