ஜெ. பூரண நலம் பெற.. போடியில் 'மஹா யாகம்' நடத்திய அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண நலம் பெற வேண்டி அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் போடியில் சிறப்பு யாகம் நடைபெற்றது.
தேனி: முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண நலம் பெற வேண்டி அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் போடியில் சிறப்பு யாகம் நடைபெற்றது.
உடல்நலக்குறைவினால் கடந்த செப்டம்பர் 22ம்தேதி இரவு முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்றோடு 35 நாட்கள் ஆகிவிட்டது. இந்த ஒரு மாத காலமும் அப்பல்லோ மருத்துவமனையின் வாயில் முன்பு ஏராளமான தொண்டர்கள் பல்வேறு வழிபாடுகள், பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெயலலிதா நலம் பெற வேண்டும் என்று அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் மத பேதமின்றி பிரார்த்தனை செய்து வருகின்றனர். முதல்வர் நலம்பெற வேண்டி தமிழகம் முழுவதும் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பு யாகம், பூஜை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா விரைில் பூரண குணமடைய வேண்டி போடிநாயக்கனூரில் தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மஹா சம்பூதிகரணம் யாகம் நேற்று நடைபெற்றது. இந்த பூஜையின் போது 5001 பெண்கள் விளக்கு பூஜையும் நடத்தினர்.