For Daily Alerts
Just In
ஊட்டியில் பரிதாபம்... சமையல் செய்யும் போது சேலையில் தீப்பிடித்து அதிமுக பெண் கவுன்சிலர் பலி!
ஊட்டி: ஊட்டி அருகே சமையல் செய்யும் போது சேலையில் தீப்பிடித்ததில் பலத்த காயமடைந்த அதிமுக பெண் கவுன்சிலர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகேவுள்ள மேல்கவட்டியை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் (32). இவரது மனைவி சர்மிளா (29). இவர் ஊட்டி ஊராட்சி ஒன்றிய 14வது வார்டு அதிமுக கவுன்சிலராக இருந்தார்.
கடந்த 19ம் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சர்மிளாவின் சேலையில் தீப்பிடித்தது. மனைவியைக் காப்பாற்ற வந்த ராஜேந்திரனுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டது.
இருவரும் ஊட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சர்மிளா இன்று உயிரிழந்தார்.
Comments
English summary
Near Ooty, an ADMK woman councilor died in a fire accident when she prepared food in home.