For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓபிஎஸ், ஈபிஎஸ் நேரில் சந்திப்பு... அதிமுக அணிகள் இன்று அதிகாரப்பூர்வமாக இணைகின்றன

அதிமுக அணிகள் இணைப்புக்கான பேச்சுக்கள் முடிந்துவிட்டதையடுத்து இன்று பிற்பகல் அக்கட்சியின் தலைமைக் கழக அலுவலகத்தில் அணிகள் அதிகாரப்பூர்வமாக இணைகின்றன என்றும், தகவல்கள் வெளியாகியுள்ளன.

By Devarajan
Google Oneindia Tamil News

Recommended Video

    துணை முதல்வராகும் ஓபிஸ்?-வீடியோ

    சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் இன்று அதிமுக தலைமைக்கழக அலுவலகத்தில் நேரில், சந்திக்கிறார்கள். இதனையடுத்து இரண்டு அணிகளும் அதிகாரப்பூர்வமாக இணைகின்றன.

    இது தொடர்பாக அதிமுக தலைமைக்கழக வட்டாரங்கள் கூறுகையில், " அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தைகள் நிறைவு பெற்றுள்ளன. அதனையடுத்து தொண்டர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

    OPS and EPS teams are merge today

    இன்று பிற்பகல் நண்பகல் 12 மணிக்கு அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் முன்னாள் முதல்வரும் இந்நாள் முதல்வரும் நேரில் சந்தித்து அணிகள் இணைப்பை உறுதிப்படுத்த இருக்கிறார்கள்.

    ஓபிஎஸ் மற்றும் அவரின் அணி தலைவர்களை மூத்த அமைச்சர்கள் நேரில் சென்று அழைத்துவர உள்ளனர். அதனால் இன்று முதல் அதிமுக அணிகள் இல்லாத கட்சியாக செய்லபடும் " என்று தெரிவித்தன.

    நேற்று வேலூரில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக அணிகள் நாளைக்குள்(இன்று) இணையும் என்று உறுதிபட கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    OPS and EPS teams are merge today at ADMK party headquarters.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X