For Daily Alerts
Just In
ஆர்கே நகரில் ஓபிஎஸ் அணி நடைபயணம்… ஊர்வலமாகச் சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார் மதுசூதனன்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிடும் மதுசூதனன் வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.
சென்னை: ஓபிஎஸ் அணியின் சார்பில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மதுசூதனன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், வேட்பாளர் மதுசூதனன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆர்.கே. நகரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் இருந்து நடைபயணமாக புறப்பட்டனர். அங்கிருந்து நடைபயணமாக சென்று தேர்தல் அலுவலகத்தை அடைந்தனர்.
தேர்தல் அலுவலகத்தில் காலை 11 மணியளவில் தேர்தல் அதிகாரி பிரவீன் நாயரிடம் வேட்புமனுவை மதுசூதனன் தாக்கல் செய்தார். அப்போது, ஓபிஎஸ், கே.பி. முனுசாமி, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
முன்னதாக, மெரினாவில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்ற ஓ. பன்னீர்செல்வம், மதுசூதனன் உள்ளிட்ட ஓபிஎஸ் அணியினர் மலர் தூவி மரியாதை செய்தனர்.
Comments
English summary
OPS team procession starts to file nomination at R.K. Nagar election office.