கொலுவுடன் இந்த மைசூர் பாக்கையும் இணைத்து நவராத்திரியை கொண்டாடுங்கள்...
என்னங்க நவராத்திரி, தீபாவளினு அடுக்கடுக்கா பண்டிகை வருது. இனிப்பு பலகாரங்கள் எல்லாம் தயாரா..? அதுல மைசூர் பாக்கும் இருக்கும்ல. ஆமாங்க இந்த மாதிரி பண்டிகை இனிப்புகளில் மைசூர் பாக்கும் முக்கிய இடத்தை பிடிச்சுருக்கு. இந்த மைசூர் பாக் எப்படி இவ்ளோ பிரபலம் ஆனதுன்னு பாக்கலாமா..?
கோயம்பத்தூர் மைசூர் பாக் வாங்க..
மைசூர் பாக் முதன் முதலில் எங்கே தயாரிக்கப்பட்டது தெரியுமா..? மைசூர் அரண்மையில் தானுங்க. மைசூர் மகாராஜா எப்பவும் புதுவகையான இனிப்புகளை ருசிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தார். அவருக்கு ஏற்றார்போல ககாசுரா மதப்பா என்ற சமையல் கலைஞர் இருந்தார். இவரும் புதுவகையான உணவுகள் சமைப்பதில் கைதேர்ந்தவர். இவர் ஒருநாள் சர்க்கரை பாகுடன் நெய், மாவு போன்ற பொருள்களை சேர்த்து ஒரு இனிப்பு பன்னடத்தை செய்தார். அந்த இனிப்பு பாகினால் செய்யப்பட்டதாலும், மைசூரில் அறிமுகமானதாலும் இந்த இனிப்பி மைசூர் பாக் என்று அழைக்கப்பட்டது.
வரலாறு முடிஞ்சது, ரொம்ப சின்ன வரலாறா இருக்குல. அதேபோல தான் இதற்க்கு தேவையான பொருள்களும் ரொம்ப கம்மி. அத பார்க்கலாம்.
1. கடலை மாவு : 1 கப்
2. நெய் : 3/4 கப்
3. சர்க்கரை : 1 1/2 கப்
4. பால் : 1/4 கப்
இப்போ இத எப்படி செய்யலாம்...?
1. எடுத்து வைத்துள்ள கடலை மாவில் நெய்யும் தண்ணீரும் சேர்த்து ஊற்றி பிசைய வேண்டும்.
2. தனி பாத்திரத்தில் சர்க்கரையை பவுடர் ஆக்கி தண்ணீருடன் இணைத்து பாகு தயாரிக்க வேண்டும்.
3. அதனை சூடேற்றும் போது அதனுடன் பாலை இணைக்க வேண்டும்.
4. அனைத்தையும் சேர்த்து ஒரு பதத்திற்கு வரும் வரை சூடேற்ற வேண்டும்.
5. சமைக்கும் போது நெய் கொஞ்சம் அதிகமாக ஊற்றி கலக்கும் போது நெய் தனியாக பிரியும்
வேளையில் அதனை தனி பாத்திரத்தில் ஊற்றி விட வேண்டும்.
6. ஆறும் முன்பே அதனை அளவுக்கு ஏற்றர்போல வெட்டி தநீதணியாக பிரித்து வைத்தல் கெட்டியாகிவிடும்.
தற்போது ருசியான மைசூர் பாக் உன்ன தயார்.
என்னக படிக்கும் போதே சாப்பிட தோணுதா..? மெசின் வாழ்க்கை வாழுற உங்களுக்கு இத செய்ய நேரம் இல்லையா..? கவலைய விடுங்க ஒரே கிளிக் போதும் நீங்க எங்க இருந்தாலும் உங்கள தேடி உங்களுக்கு பிடித்த மைசூர் பாக் வரும். எப்படின்னு தெரியலையா..? அதுக்குதான் ஸ்வீட்கனா.காம் இருக்கு.
இங்க உங்களுக்கு என்னங்க வேணும்? நீங்க நவராத்திரி கொண்டாட அனைத்து இனிப்பு மற்றும் கார வகைகளும் வேணுமா..? அதுவும் இங்கயே கிடைக்கும். அதுனால கவலைய விடுங்க. இங்க நீங்க ஆர்டர் செய்தால் போதும். நீங்க நவராத்திரி கொண்டாட வேண்டிய அனைத்து இனிப்புகளையும் நீங்க ஆர்டர் செய்த 24 அடுத்த மணி நேரத்தில் உங்கள் கை வந்து சேரும்.
இன்னும் எதுக்குங்க தயங்குறீங்க.? நவராத்திரி கொலு பொம்பை ரெடி ஆயிருச்சு இனிப்புகளையும் ஸ்வீட்கானா.காம்-ல் ஆர்டர் செய்து வாங்கி நவராத்திரியை சிறப்பாக கொண்டாடுங்க..!