மண் மனம் மாறாத மணப்பாறை முறுக்கு.. நாங்க புதுசு கண்ணா புதுசு!!
என்னதான் ஆயிரம் வகை சைடு டிஷ்கள் இருந்தாலும், அது முறுக்குக்கு ஈடாகாது. அப்படி ஒரு தனித்துவம் இருக்கிறது இந்த உப்பு கலந்த ஒரு வகையான உணவுப்பண்டத்திற்கு. அதுவும் மணப்பாறை முறுக்கு என்றால் அதன் சுவையே தனி.
மணப்பறை முறுக்கு:
உலகத்தில் பல வகை முறுக்கு, பல இடங்களில் கிடைக்கும் ஆனால் தரமாகவும், சுவையாகவும் கிடைக்கும் ஒரே ஊர் மணப்பாறை மட்டும் தான். மணப்பாறையில் 1930ஆம் ஆண்டுகளில், இம் முறுக்கு தயாரிக்கும் தொழிலானது அறிமுகம் ஆனது. இன்றும் பல குடும்ப மக்கள், இதை பிரதான குடிசை தொழிலாக இங்கு செய்து வருகிறார்கள்.
இப்படி வந்த முறுக்கு அதிக ருசியாக இருப்பதன் காரணம் மணப்பாறை நீரின் உப்பு தன்மையே தான் என்றும் பலர் இந்த ஊரில்தெரிவிகிறார்கள். மணப்பாறை ஊரின் நீர் இயற்கையாக உப்பு தன்மையை கொண்ட ஊர், இந்த உப்பு தன்மையை கொண்ட நீர்கொண்டு இங்கு முறுக்கு தயாரிக்கப்படுவதால் இது மிகவும் ருசியாக இருப்பதாகவே பலர் நம்புகிறார்கள்.
இந்த ஊரில் மட்டும்முறுக்கை இரண்டு முறை எண்ணையில் பொறித்து எடுக்கிறார்கள் இதுவும் இதன் ருசிக்கு ஒரு காரணம். ஆனால் இந்த முறுக்கு தயாரிக்க இங்கு இதற்காக தனியாக அரிசி விளை வித்து அதை பயன்படுத்துகிறார்கள் அதன்காரணமாகவும் மணப்பாறை முறுக்கு ருசியாகவும் அதிக மணமாகவும் இருக்கிறது. மணப்பாறையில் தயாராகும் முறுக்கு உலக அளவில் பல விதமான நாடுகளுக்கு தினமும் ஏற்றுமதி செய்வது இன்றளவும்நடக்கிறது.
இந்த மணப்பறை முறுக்கை எப்படி செய்யவேண்டும் ?
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு -1 கிலோ
உளுத்தம்பருப்பு மாவு - சிறிதளவு
இரண்டையும் நன்றாக கலந்து, அதனுள் ஜீரகம், எள், பெருங்காயம், ஓமம், சுமார் 10 கிராம் அளவுக்கு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவும். இதனுடன் எண்ணெய் ஊற்றினால் அச்சிலிருந்து மாவு சுலபமாக வெளியேறும். இந்த கலவையை சிறிது சிறிதாக எடுத்து முறுக்கு சுற்றும் அச்சில் வைத்து தங்கள் இஷ்டம் போல் முறுக்கு வடிவத்தில் பிழிந்து எடுக்கவும். பின்பு இதை நன்றாக உலர வைக்கவும். நன்றாக உலர்ந்த பின் அதை மிதமானை சூட்டில் எண்ணையில் பொறித்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பின்னர் அடுத்த செட்டு முறுக்குகளை போட்டு பொரித்து எடுக்க வேண்டும். பின் மீண்டும் முதலில் பொறித்த முறுக்குகளை போட்டு பொரித்து எடுக்க வேண்டும். மொரு மொருப்பு தன்மையை பத படுத்த, காற்று கூட புகாத ஒரு டப்பாவில் வைத்து டைட்டாக மூடிவிட வேண்டும். என்னதான் நாம் பார்த்து பார்த்து செய்தாலும், மணப்பாறை முருக்கின் ருசி போல் அமைவது கடினம் தான். மணப்பாறை தண்ணீரின் அந்த அதீத உப்பின் அளவும் மற்றும் அதற்காகவே விளைய வைக்கும் அரிசிதான் இந்த மணப்பாறை முருக்கின் தனித்துவம்.
அப்படிப்பட்ட இந்த மணப்பறை முறுக்கை நேடிவ்கிருஷ்.காம் (www.nativcrush.com) ஆர்டர் செய்து உண்டு மகிழுங்கள். இப்படி சுவையான மணப்பாறை முறுக்கை தயாரித்து உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து சேர்க்கிறது நேடிவ்கிருஷ்.காம் (www.nativcrush.com).
இங்கு வாங்கும் பொருள்களின் மீதும் அதன் தரத்தினை பற்றியும் உங்களுக்கு சந்தேகம் தோன்றினால், கவலை வேண்டாம். என்னென்றால், இங்கு நீங்கள் வாங்கும் பொருளுடன் உங்களுக்கு அந்த பொருளுக்கான தர சான்றிதழும் கூடவே அனுப்பப்படுகிறது. நீண்ட தூர பயணமோ எப்பொழுது வரும்..? எப்படி வரும்..? என்றும் நீங்கள் யோசிக்க தேவையில்லை. www.nativcrush.com தமிழகத்தில் உள்ள அனைத்து முன்னணி நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துள்ளது. அதனால், நீங்கள் வாங்கும் பொருள் 24 மணி நேரத்தில் உங்கள் கைக்கு வந்து சேரும்.
எலேய் ஒரு தடவ வாங்கி பாரு லே நம்ம நேடிவ்கிருஷ்.காம் (www.nativcrush.com) லே, அப்பறம் வாங்கி கிட்டே இருப்பீங்க. எலேய் மிஸ் பண்ணிடாதீங்க அப்பறம் வருத்தப்படுவீங்க.