ஓபிஎஸ்ஸை தனிப்பட்ட முறையில் கேவலப்படுத்தும் முயற்சியில் இறங்கியது சசி குரூப்!
அமைச்சர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறப்படவில்லை என்று கல்வி அமைச்சர் மாஃபா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் அமைச்சர்கள் யாரிடம் இருந்து கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறப்படவில்லை என்று கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
போயஸ் கார்டன் சென்ற மாஃபா பாண்டியராஜன், விரைவில் சசிகலா தலைமையில் ஆட்சி அமைக்கப்படும் என்றும் அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம் என்று கூறினார். ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் அமைச்சர்கள் யாரையும் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஓபிஎஸ் எந்த விதமான ஆதாரமும் இன்று குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகிறார். பொதுச் செயலாளரான சசிகலாவின் காலில் விழுந்தவர் ஓபிஎஸ் என்றும் அமைச்சர் பாண்டியராஜன் குற்றம்சாட்டினார். எம்எல்ஏக்கள் அனைவரும் அவர்களின் விருப்பத்தின் பேரில்தான் ஓட்டலில் தங்கி இருக்கின்றனர் என்றும் அவர்கள் யாரும் கட்டாயப்படுத்தப்படவில்லை என்றும் பாண்டியராஜன் கூறினார்.
மேலும், இன்று மாலை 10 அமைச்சர்களுடன் சசிகலா ஆளுநரை சந்திக்க உள்ளார் என்றும் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.