டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுமி பலி - நெல்லையில் பரபரப்பு
நெல்லை: நெல்லையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக மேலும் ஒரு சிறுமி பலியானார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 19 பேர் சிகிச்சை பலன் இல்லாமல் உயிர் இழந்தனர்.
இவர்களில் பெரும்பாலாோர் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள். இப்பகுதியில் பரவி வரும் மர்ம காய்ச்சலை கட்டுபடுத்த சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், விருதுநகரை அடுத்துள்ள நெல்லை மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் நெ்ல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேர் மர்ம காய்ச்சலால் இறந்தனர். இந்த நிலையில் மேலும் ஒரு சிறுமி மர்ம காய்ச்சலால் பலியானார். இது மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.