டாஸ்மாக்கில் மது அருந்திய சில நிமிடங்களில் ஒருவர் பலி...- வீடியோ
விழுப்புரம் டாஸ்மாக்கில் மது அருந்திய சில நிமிடங்களிலேயே திண்டுக்கல்லைச் சேர்ந்த சரவணன் உயிரிழந்துள்ளார். அந்த மதுவில் விஷமிருந்திருக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.
விழுப்புரம்: விழுப்புரத்தில் மது அருந்திய ஒருவர், அடுத்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்துள்ளார். இதனால் டாஸ்மாக் சரக்கில் விஷம் கலந்திருக்குமோ என்கிற ஐயம் எழுந்துள்ளது.
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் சரவணன். இவர் தன் நண்பரை சந்திக்க விழுப்புரம் வந்துள்ளார். அப்போது இருவரும் சென்று டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளனர்.
ஆனால் சரவணன் மது குடித்த சில நிமிடங்களிலேயே டாஸ்மாக் கடை வாசலிலேயே மயங்கி விழுந்து, உயிரிழந்துள்ளார். அவரது உடல் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை நடக்கவுள்ளது. அதன்பிறகே அவரது இறப்பிற்கான காரணம் தெரிய வரும்.
டாஸ்மாக் நிறுவனம் வழங்கும் மது பாட்டில்களில் பலமுறை பல்லி, பூச்சி உள்ளிட்டவை விழுந்த வீடியோக்கள் வைரலாகி உள்ளது. இருந்தபோதும் இந்த விஷயத்தில் டாஸ்மாக் அலட்சியமாகவே உள்ளது.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் மது அருந்திய சில நிமிடங்களில் சரவணன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் டாஸ்மாக் மீது மக்களுக்கு உள்ள கோபத்தையும் அதிகரித்துள்ளது.