For Daily Alerts
Just In
திருச்செந்தூர்: அதிமுக பிரமுகர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு
திருச்செந்துார்: திருச்செந்துார் அ.தி.மு.க., பிரமுகர் ஆனந்தராமஜெயம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனந்தராமஜெயம் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் வீட்டிலிருந்த தண்ணீர் தொட்டி சேதமடைந்தது. இதுகுறித்து திருச்செந்துார் காவல் நிலையத்தில் ஆனந்தராமஜெயம் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குண்டு வீச்சில் சேதமடைந்த இடத்தை பார்வையிட்டனர். பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களைப் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொழில் போட்டியா? அரசியல் விரோதம் காரணமாக தாக்குதல் நடத்தப்பட்டதா என்றும் திருச்செந்தூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Comments
English summary
A petrol bomb was today hurled at the ADMK worker house in Tiruchendur police said today.
Story first published: Wednesday, September 2, 2015, 8:23 [IST]