For Daily Alerts
Just In
சென்னை கடலில் இருந்து ஆயிலை அகற்ற ஐ.ஓ.சி களமிறங்க வேண்டும்: பெட்ரோலிய அமைச்சகம்
ஆயிலை அகற்ற உதவுமாறு, சென்னையிலுள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின், ஆராாய்ச்சி மேம்பாட்டு பிரிவுக்கு மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது.
சென்னை: கடந்த சனிக்கிழமை, சென்னை துறைமுகம் அருகே, இரு கப்பல்கள் மோதிக்கொண்டதால் அதிலிருந்த எண்ணை கொட்டி, எண்ணூர், மெரினா உள்பட சென்னையின் கடலோர பகுதிகள் எண்ணை படலமாக காட்சியளிக்கிறது. இதுவரை 61 டன் எண்ணை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இன்னும் இரு தினங்களில் முழு அளவிலான கழிவுகளும் அகற்றப்படும் என்று கடலோர காவல்படை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் உதவுமாறு, சென்னையிலுள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின், ஆராாய்ச்சி மேம்பாட்டு பிரிவுக்கு மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது. இன்று இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகளும் எண்ணையை அகற்றும் பணியில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே மாசடைந்த கடல் நீர் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
Petroleum Ministry advises Indian Oil's R&D to take active part in oil spill management in Chennai.
Story first published: Friday, February 3, 2017, 8:16 [IST]