மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஐசியுவில் போராடும் ஏழை சிறுமிக்கு உதவுங்களேன்
திருச்சி: திருச்சியை சேர்ந்த ஆட்டோ டிரைவரின் 13 வயது மகள் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ள இந்தச் சிறுமியின் மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியாமல் ஏழைக் குடும்பம் தத்தளித்து வருகிறது.
திருச்சியை சேர்ந்தவர் கணேச மூர்த்தி. ஆட்டோ டிரைவர். அவரது மகள் சாரு பிரியா (13). ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு மூளைக் காய்ச்சல் ஏற்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவ்வப்போது வலிப்பும் ஏற்பட்டு வருவதால் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் பிரியாவுக்கு கடந்த 3ம் தேதியில் இருந்து செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் அவரின் மருத்துவ செலவை சமாளிக்க முடியாமல் அவரது பெற்றோர் திணறுகிறார்கள். இதனால் சிகிச்சையை தொடர முடியாத அவலமான நிலை ஏற்பட்டுள்ளது.
என்ன செய்வது என்று தெரியாமல் கண்கலங்கி நிற்கிறது அந்தக் குடும்பம். இந்தக் சிறுமிக்கு நீங்களும் உதவலாமே..
பிரியாவுக்கு உதவி செய்ய விரும்புவோர் அவரின் தாய் மாமாவான மதுரையைச் சேர்ந்த முனியாண்டி என்பவரின் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி வைக்கலாம்.
வங்கி கணக்கு விபரம்,
R. Muniyandi,
State Bank Of India, Lady Doak college branch,
A/C No: 20310208781
IFSC code: SBIN0010315
தொடர்புக்கு:
கணேச மூர்த்தி - +91 9514212300
முனியாண்டி - +91 9789386301