பிளஸ் 2 முடிவுகள்: பாட வாரியாக சென்டம் போட்ட தங்கங்கள்!
சென்னை: இயற்பியல் பாடத்தில் கடந்த ஆண்டு அதிக அளவில் 200க்கு 200 பெற்றிருந்தனர். ஆனால் இந்த முறை அது வெகுவாக சரிந்து விட்டது.
தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 90.6 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு கிடைத்துள்ளது. இது 2014 ஆம் வருடத்து தேர்ச்சி விகிதமேயாகும். அதாவது கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வுவை தமிழகம், புதுச்சேரியில் 8 லட்சத்து 86 ஆயிரம் மாணவர்-மாணவியர்கள் எழுதினர். கடந்த மார்ச் 5 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரையில் நடைபெற்ற இந்த தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் 90.6 சதவீதம் பேர் தேர்வு பெற்றுள்ளனர். மாணவிகள் 93.4 சதவீதமும், மாணவர்கள் 87.7 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பாடவாரியாக 200க்கு 200:
கணிதம் -9710
இயற்பியல் -124
வேதியியல் -1049
தாவரவியல் -75
விலங்கியல்- 4
உயிரியல் - 387
கணினி அறிவியல் - 577
வணிகவியல் - 819
புள்ளியியல் - 47
வரலாறு - 31
பொருளாதாரவியல் - 179
அக்கவுன்டன்சி - 5167,
பிசினஸ் மேத்ஸ் - 1036.
கடந்த முறையை விட கணக்கில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்திருந்தாலும், 2710 பேர் முதலிடம் பெற்ற இயற்பியலில் இந்த வருடம் 124 பேர் மட்டுமே முதலிடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.