விவசாயிகள் தற்கொலை… பச்சை துரோகம் செய்த பாஜக.. அன்புமணி காட்டம்
விவசாயிகள் தற்கொலை, தமிழ்நாட்டில் வறட்சி என தமிழகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனை எல்லாம் பாஜக அரசு வேடிக்கை பார்த்து தமிழகத்திற்கு பச்சை துரோகம் செய்து வருகிறது பாஜக அரசு என்று அன்புமணி ராமதாஸ் கூறி
கும்பகோணம்: தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கும்பகோணத்தில் இன்று பாமக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
போராட்டத்தில் அன்புமணி பேசியதாவது:
விவசாயிகள் தொடர்பான போராட்டம் என்பது அரசியல் போராட்டம் இல்லை. இது விவசாயிகளின் உயிர் பிரச்சனை. தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக உடனடியாக அறிவிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 25ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயக் கூலிகளுக்கு ஒரு தவணையாக 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். இறந்த விவசாயிகள் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். இதனை உடனடியாக செய்ய வேண்டும்.
காவிரியில் தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியது மிக மிக அவசியம். உச்சநீதிமன்றம் வழங்கிய நல்ல வாய்ப்பை மத்திய அரசு கொடுக்காமல் ஏமாற்றிவிட்டது. இதில் பச்சை துரோகம் செய்தது மோடி அரசு. இது மன்னிக்க முடியாத துரோகம்.
50 எம்பிக்களை வைத்திருக்கும் அதிமுக, காவிரி மற்றும் விவசாயிகள் விஷயத்தில் மத்திய அரசிடம் கெஞ்சிக் கொண்டு நிற்கிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.