ஷங்கர் படத்தில் வில்லன் கேரக்டர் தருவதாக கூறி ரூ. 28.5 லட்சம் மோசடி... நட்ராஜ் ஐ.பி.எஸ் மீது புகார்
சென்னை: இயக்குநர் ஷங்கரிடம் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 28.5 லட்சம் மோசடி செய்ததாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் நட்ராஜ் மீது சென்னையைச் சேர்ந்த எம்.ஆர்.சரவணன் என்பவர் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் எம்.ஆர்.சரவணன். இவர் இன்று திருவான்மியூர் காவல் நிலையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் நட்ராஜ் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அப்புகாரில் அவர், நட்ராஜும், அவரது மகனும் சேர்ந்து கடந்த 2012ம் ஆண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 28.5 லட்சம் மோசடி செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், தற்போது தான் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வரும் நிலையில், கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதாகவும், அதற்கு நட்ராஜ் துப்பாக்கியைக் காட்டி, ‘பணத்தை திருப்பிக் கேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும், தனது கையில் இருந்த ஆதாரங்களைப் பறித்துக் கொண்டதாகவும் சரவணன் தெரிவித்துள்ளார்.
அவரது புகாரின் விவரம்: