விசாரணைக் கைதி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை... திருச்சியில் பரபரப்பு
விசாரணைக் கைதி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி: பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தாக கைது செய்யப்பட்டவர் சிறையில் தூக்கு போக்கு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி சமயபுரம் அருகில் உள்ள நரசிங்கமங்கலத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. 32 வயதான இவர், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் திருச்சியில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், விசாரணைக் கைதியான பழனிச்சாமி சிறையில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு விசாரணைக் கைதி தூக்குபோட்டுக் கொண்டு தற்கொலை செய்யும் அளவிற்கு பாதுகாப்புகள் சிறையில் என்ன நடந்த்து என்றும் அங்குள்ள பாதுகாப்புகள் குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.
இந்த சம்பவத்தால் பழனிச்சாமியின் உறவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தற்கொலைக்கு காரணமான காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழனிச்சாமியின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.