For Daily Alerts
Just In
தனியார் பேருந்து மோதியதில் இளைஞர் பலி : உறவினர் மறியல் - வீடியோ
உசிலம்பட்டி அருகே தனியார் பேருந்து ஒன்று இளைஞர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மதுரை: உசிலம்பட்டி அருகே தனியார் பேருந்து மோதி இளைஞர் ஒருவர் இறந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி அருகே, புதுப்பட்டி என்ற ஊரில் தனியார் பேருந்து ஒன்று சாலையில் போய்க்கொண்டிருந்தவர் மீது மோதியதில் மலைராஜ் என்பவர் உயிரிழந்தார்.
Recommended Video
Youngster Death in Bus Accident at Usilampatti-Oneindia Tamil
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்பு அங்கு வந்த போலீசார் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தியதால் மறியலைக் கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறுதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகம் நடக்கின்றன. இந்தியாவில் அதிக சாலை விபத்து நடக்கும் மாநிலங்களில் தமிழகத்துக்கு இரண்டாம் இடம். ஆனால் இந்த விபத்துகளைக் குறைக்க அரசு உரிய நடவடிக்கைகளையும் சட்ட திட்டங்களையும் கடைபிடிக்காமல் இருப்பதால் விபத்துகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது.
Comments
English summary
Near Usilampatti, a private bus hit on an youngster and he died there itself. Angered relatives protested in the road.
Story first published: Thursday, July 20, 2017, 18:17 [IST]