For Daily Alerts
Just In
நாங்களும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலைப் புறக்கணிக்கிறோம்... டாக்டர் கிருஷ்ணசாமி
சென்னை: டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் இடைத் தேர்தலைப் புறக்கணிக்கும் கட்சிகளின் வரிசையில் புதிய தமிழகமும் இணைந்துள்ளது.
ஏற்கனவே திமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இந்த நிலையில் புதிய தமிழகமும் அந்த முடிவை தற்போது எடுத்துள்ளது.
ஜெயலலிதா எம்.எல்.ஏ ஆவதற்கு வசதியாக இங்கு இடைத் தேர்தலை திணித்துள்ளது அதிமுக. இந்தத் தேர்தலை பல்வேறு காரணங்களைக் காட்டி புறக்கணிப்பதாக திமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன. இந்த நிலையில் புதிய தமிழகமும் இதில் இணைந்துள்ளது.
தனது கட்சி இந்த இடைத் தேர்தலில் போட்டியிடாது. இது திணிக்கப்பட்ட தேர்தல், பணம் விளையாடும் என்று கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
Comments
English summary
Puthiya Tamilagam has decided to stay off from R K Nagar by election.
Story first published: Sunday, May 31, 2015, 13:52 [IST]