For Daily Alerts
Just In
மதுக்கடைக்கு எதிர்ப்பு....கடப்பாறையுடன் குதித்த பெண்கள்.. டாஸ்மாக் கடையை சூறையாடினர்!
ஸ்ரீபெரும்புதூர் அருகே மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மதுக்கடையை அவர்கள் சூறையாடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பூந்தண்டலம் சக்தி நகர் பகுதியில் அரசு சார்பில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று மதுக்கடையை அடித்து நொறுக்கி அப்பகுதி பெண்கள் சூறையாடினர். மேலும் குன்றத்தூர் - ஸ்ரீபெரும்புதூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது.
Comments
English summary
public opposing tasmac they ransacked tasmac near in Sriperumbudur. They did road blockade also in the Sriperumbudur road.