For Daily Alerts
Just In
கடலில் அனுமதியின்றி பயணித்தால் நடவடிக்கை - புதுவை முதல்வர் எச்சரிக்கை!
புதுச்சேரி கடல்பகுதியில் முறையான அனுமதியின்றி பயணம் மேற்கொள்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதுவை முதல்வர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.
புதுச்சேரி: முறையான அனுமதி இல்லாமல் கடலில் பயணம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதுவை முதல்வர் நாராயண சாமி எச்சரித்துள்ளார்.
புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் பயணிகள் அனுமதி பெறாமல் கடல் பயணம் மேற்கொள்வதால் சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர். அண்மையில் புதுச்சேரி வந்த சுற்றுலா பயணிகள் சிலர், பறவைகளைப் பார்ப்பதற்காக படகில் சென்றுள்ளனர்.
அப்போது அவர்கள் எல்லை தாண்டி பயணம் செய்த போது, படகில் கோளாறு ஏற்பட்டு பாதியில் நிற்க, ஆபத்தான நிலையில் இருந்தவர்களை புதுச்சேரி கடலோரப் படையினர் மீட்டு வந்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, முறையான அனுமதி இல்லாமல் கடலில் பயணம் மேற்கொள்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபப்டும் என எச்சரித்தார்.
Comments
English summary
Puducherry CM Narayanasamy warned people who travels in Sea without proper and prior permission.
Story first published: Tuesday, September 19, 2017, 13:41 [IST]