ஓபிஎஸ் கோஷ்டியில் தொடர்ந்து ஐக்கியமாகும் மாஜி எம்.எல்.ஏக்கள்
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியில், முன்னாள் எம்.எல்.ஏக்கள் பலரும் இணைந்து வருகிறார்கள். அதில் லேட்டஸ்ட், புதுக்கோட்டை தொகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜசேகர் ஆகும்.
சசிகலா கோஷ்டிக்கு எதிராக பன்னீர்செல்வம் தனி கோஷ்டியாக செயல்பட்டு வருகிறார். படிப்படியாக மொத்தம் 12 எம்எல்ஏக்கள் ஓ.பி.எஸ் பக்கம் வந்தனர். எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக, கூவத்தூர் ரிசார்ட்டில் எம்எல்ஏக்களை பிடித்து வைத்திருந்த நிலையிலும் அவர்களை பிரித்து கூட்டி வர பன்னீர் அணியால் முடியவில்லை. ஆட்சி எடப்பாடி பழனிச்சாமியிடம் இருப்பதால் அவர்கள் அங்கு இருக்கவே விரும்புகிறார்கள்.
இருப்பினும், முன்னாள் எம்எல்ஏக்ள் பலரும் ஓ.பி.எஸ் பக்கம் வருகிறார்கள். வீரபாண்டி செல்வம், முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி, வெங்கடாஜலம், செல்வராஜ், நடேசன், ரவிச்சந்திரன், ஓமலூர் சிவபெருமான், பல்பாக்கி கிருஷ்ணன், ஆத்தூர் மாதேஸ்வரன், கெங்கவல்லி அழகம்மாள் உள்ளிட்ட பல மாஜி எம்எல்ஏக்கள் ஓ.பி.எஸ் அணியில் உள்ளனர். இந்த மாஜி எம்எம்ஏக்கள் பட்டியலில் ராஜசேகர் புதிதாக சேர்ந்துள்ளார்.
ராஜசேகர், புதுக்கோட்டை தொகுதி சிட்டிங் அதிமுக எம்எல்ஏ என தவறுதலாக நேற்று 'ஒன்இந்தியாதமிழ்' வெப்சைட்டில் செய்தி வெளியிட்டுவிட்டோம் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்.