For Quick Alerts
For Daily Alerts
Just In
காலம் கடந்த தலைவனுக்கு புதுகை அகதிகள் முகாமில் மெளன அஞ்சலி!
புதுகை: மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களுக்கு புதுக்கோட்டை தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து காலையில் இருந்தே மிகப்பிரண்டமான தட்டிகள் வைத்தனர். அதனைத்தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு முகாம் நுழைவுவாயில் எல்லோரும் ஓன்று திரண்டனர்.
சரியாக 7 மணிக்கு காற்று பலமாக வீசவும், லேசான மழைத்துளி போடவும் கைகளால் மறைத்துக்கொண்டு மெழுகுவர்த்தியை ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.
இதில் முகாம் தலைவர் ச.கமலநாதன், கல்லூரிப் பேரவைத் தலைவர் கு.தர்சனா, செயலர் என்.பிரேமா, பொருளாளர் தனுஷா, மாணவர் மன்றத்தலைவர் கே.ராஜ்குமார், செயலர் ஜெ.வர்ஷா, பொருளாளர் பெ.ரெபேக்கா மற்றும் இளைஞர் மன்ற நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
Comments
English summary
Sri lankan refugees from pudukkotai district pays their last respect to Abdul kalam.
Story first published: Wednesday, July 29, 2015, 11:21 [IST]