For Daily Alerts
Just In
காவிரி பந்த்.. புதுக்கோட்டையிலும் நல்லாதரவு... கடைகள் முழுமையாக மூடல்!
புதுகை: காவிரியின் குறுக்கே அணைக் கட்டுவதை கண்டித்து தமிழகம் தழுவிய போராட்டத்திற்காக புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
காவிரியின் குருக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை கண்டித்தும், கர்நாடகாவின் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்தக் கோரியும் அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 90 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. சுற்றுவட்டார கிராமங்களிலும் எந்தவொரு கடைகளும் திறக்கப்படவில்லை.
புதுக்கோட்டை நகரில் அமைந்துள்ள முக்கிய கடைவீதியான கீழராஜ வீதியிலும் கடைகள் முழுவதுமாக அடைக்கபட்டு இருக்கிறது. இதனால், மாவட்டமே வெறிச்சோடிக் காணப்படுகின்றது.
Comments
English summary
Pudukkottai district shops closed due to the bunth in all over Tamil Nadu.