ஓபிஎஸ் அணி முடிந்துபோன முதியோர் இல்லம்... சொல்றது யாருன்னு பாருங்க மக்களே!
ஓபிஎஸ் அணி முடிந்துபோன முதியோர் இல்லம் என தினகரனின் தீவிர ஆதரவாளரான புகழேந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை: ஓபிஎஸ் அணி முடிந்துபோன முதியோர் இல்லம் என தினகரனின் தீவிர ஆதரவாளரும் கர்நாடக மாநில அதிமுக. அம்மா அணி செயலாளருமான புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அதிமுக அம்மா அணி கர்நாடக மாநில செயலாளரான புகழேந்தி ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா மற்றும் தினகரனின் தீவிர ஆதரவாளராக மாறிவிட்டார். ஜெயலலிதா உயிரோடு இருந்த போது இருக்கும் இடம் தெரியாமல் இருந்த புகழேந்தி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பெரும் பிரபலமாகிவிட்டார்.
அடிக்கடி செய்தியாளர்களை சந்திப்பது, ஓபிஎஸ் அணியை வாருவது, சசிகலா மற்றும் தினகரனின் தீவிர ஆதரவாளர் என காட்டிக்கொள்வது என புகழேந்தி அமைச்சர்களுக்கு ஈடாக பிரபலமாகிவிட்டார்.
நினைவாற்றலை இழந்துவிட்டது
இந்நிலையில் ஓபிஎஸ் அணி குறித்து புகழேந்தி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஓபிஎஸ் அணியினர் நினைவாற்றலை இழந்து உள்ளதாக அவர் சீண்டினார்.
ஒன்றும் செய்யவில்லை
இனி அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் புகழேந்தி கூறினார். சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிப்பேன் என்று சவால் விட்ட ஓ.பி.எஸ். இதுவரை அதைச் செய்யவில்லை என்றும் புகழேந்தி கூறினார்.
உளறிக்கொடுகிறார் ஓபிஎஸ்
அவர் அ.தி.மு.க.வை விட்டு பிரிந்து சென்றபோது இருந்த 12 எம்.எல்.ஏ.க்களை தவிர வேறு யாரும் அவருடன் செல்லவில்லை என்றும் புகழேந்தி கூறினார்.தொண்டர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு இல்லை என்பதால் உளறிகொட்டி வருகிறார் என்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சரமாரியாக விளாசினார்.
முடிந்துபோன முதியோர் இல்லம்
மேலும் ஓபிஎஸ் அணி என்பது முடிந்துபோன முதியோர் இல்லம் என அவர் சாடினார். முதியோர்களை இழிவுப்படுத்தும் வகையில் புகழேந்தி பேசியிருப்பது சரச்சையை ஏற்படுத்தியுள்ளது.