எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2,காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு
சென்னை: தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 காலாண்டுத் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
பள்ளிக்கல்வி இயக்குனரகம் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 காலாண்டுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
எஸ்.எஸ்.எல்.சி. கலாண்டுத் தேர்வானது செப்டம்பர் 8-ந் தேதி தொடங்குகிறது. அதன்படி, செப்டம்பர் 8-ந் தேதி - தமிழ் முதல் தாள், 10-ந் தேதி - தமிழ் 2-வது தாள், 12-ந் தேதி - ஆங்கிலம் முதல் தாள், 14-ந் தேதி ஆங்கிலம் 2-ம் தாள், 16-ந் தேதி - கணிதம், 19-ந் தேதி -அறிவியல், 21-ந் தேதி - விருப்ப மொழி, 23-ந் தேதி - சமூக அறிவியல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேபோல, செப்டம்பர் 8-ந் தேதி பிளஸ்-2 காலாண்டு தேர்வு தொடங்குகிறது. செப்டம்பர் 8-ந் தேதி - தமிழ் முதல் தாள், 9-ந் தேதி - தமிழ் 2-வது தாள், 10-ந் தேதி - ஆங்கிலம் முதல் தாள், 12-ந் தேதி - ஆங்கிலம் 2-ம் தாள், 14-ந் தேதி - வணிகவியல், மனையியல், புவியியல், 15-ந் தேதி - கணிதம், நுண்ணுயிரியல், விலங்கியல், அரசியல் அறிவியல் உள்ளிட்ட தொழில் கல்வி, 16-ந் தேதி - உயிரி வேதியியல், இந்திய பண்பாடு, கம்ப்யூட்டர் சயின்ஸ், சிறப்பு தமிழ், புள்ளியியல், தகவல் மேலாண்மை ஆங்கிலம், 19-ந் தேதி - இயற்பியல், பொருளியல் மற்றும் தொழில் தேர்வுகள், 21-ந் தேதி - வேதியியல், கணக்கு பதிவியல், 23-ந் தேதி - உயிரியல், தாவரவியல், வரலாறு, வர்த்தக கணிதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.