For Quick Alerts
For Daily Alerts
Just In
காற்றுடன் பெருமழை... கிருஷ்ணகிரி மக்கள் மகிழ்ச்சி! - வீடியோ
கிருஷ்ணகிரியில் சிறு தூறலாக ஆரம்பித்து பெரும் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கிருஷ்ணகிரி: தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வரும் வேளையில் வெப்ப சலனத்தின் காரணாமாக கிருஷ்ணகிரியில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வெயில் அதிக அளவில் வருகிறது. மேலும் வெப்பநிலை இதுவரை தமிழக மக்கள் உணர்ந்திராத உயரத்துக்குச் சென்று துன்புறுத்தி வருகிறது.
திருச்சி, மதுரை, நெல்லை,வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை 110 டிகிரை ஃபாரன்ஹீட்டைத் தொட்டு, மகக்ளை வெளியில் நடமாட விடாமல் முடக்கி வைத்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் தான் வெயில் கொளுத்தியது. இந்நிலையில் அங்கு மெதுவாக ஆரம்பித்த மழை, பலத்த காற்றுடன் கூடிய பெருமழையாகப் பொழிந்தது. இதனால் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அட்டைந்தனர். மழையால் வெப்பநிலை சற்றுக் குறைந்து காணப்படுகிறது.
Comments
English summary
After a severe summer in krishnagiri yesterday there was one hour continuous rain and people are happy.
Story first published: Wednesday, April 26, 2017, 16:31 [IST]