திருச்சி, மதுரை, வேலூர் மக்களை குளிர்வித்த மழை !
திருச்சி: திருச்சி, மதுரை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்திற்கு வெப்பச்சலனம் காரணமாக தொடர் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சி மாநகரில் மாலை முதலே கருமேகங்கள் சூழ்ந்திருந்தன. திருச்சி ஸ்ரீரங்கம், மாம்பழச்சாலை,சிந்தாமணி,ஏர்போர்ட், உறையூர், மலைக்கோட்டை உள்ளிட்ட திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு ஒரு மணி நேரமாக கன மழை வெளுத்து வாங்கியது். சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஒடியது். இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாயினர்.
அதேபோல், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், தியாக துருகம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இடி மற்றும் மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
மேலும், வேலூர், ஆம்பூர், பெரியாங்குப்பம், ஆலாங்குப்பம், திருவண்ணாமலை, மதுரையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலும் நேற்று நல்ல மழை பெய்தது. வெயிலின் தாக்கத்தினால் அவதிபட்டுவந்த மக்கள் இந்த மழை குளிர்வித்தால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.