சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை #Chennai
சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினம்பாக்கம் போன்ற இடங்களில் பலத்த மழை பெய்தது.
காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக அவ்வபோது கன மழை பெய்து வருகிறது. மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அண்ணா சாலை, கோடம்பாக்கம், வடபழனி, விருகம்பாக்கம், நுங்கம்பாக்கம், தியாகராயர் நகர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினம்பாக்கம் போன்ற இடங்களில் பலத்த மழை பெய்தது.