For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாடாய்படுத்தும் அரசியல் மேனியா...தூக்கம் தொலைத்த ரஜினி...மனநிம்மதிக்காக எங்கே செல்கிறார் தெரியுமா?

அரசியல் பிரவேசம் குறித்து மீடியாக்களும், ரசிகர்களும் துளைத்துப் போட்டத்தில் டென்ஷனாகியுள்ள நடிகர் ரஜினிகாந்த் அவ்வபோது கேளம்பாக்கத்தில் உள்ளது தனது பண்ணை வீட்டிற்கு சென்று இளைப்பாறி வருகிறாராம்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : நடிகர் ரஜினிகாந்த்தை சுற்றும் அரசியல் பேச்சுகளால் தூக்கம் தொலைத்த ரஜினி இரவு நேரங்களில் மாவட்ட ரசிகர் மன்ற ரசிகர்களுடன் மாவட்ட நிலவரங்களை கேட்டறிந்த வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 2 வாரமாக தமிழக அரசியலில் சூட்டை கிளப்பும் ஒரு விஷயம் என்றால் அது ரஜினியின் அரசியல் வருகை குறித்த பிரத்யேக விஷயங்களாகத்தான் இருக்கும். ரஜினிகாந்த் சொன்ன 'போர்' என்ற வார்த்தையை அரசியல் கட்சியினரும், தமிழ் ஆர்வலர்களுக்கு தங்களுக்கு ஏற்ப பயன்படுத்தி ரஜினியை வாழ்த்தியும், விமர்சித்தும் வருகின்றன. இதே போன்று ரஜினி எழுப்பி விட்ட மற்றொரு சர்ச்சை தான் பச்சைத் தமிழன் என்பது, கன்னடர் எப்படி தமிழராக முடியும் அரசியலுக்கு வரவே அவர் இவ்வாறு பேசுகிறார் என்று கடும் விமர்சனங்கள் எழுகின்றன.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று அவரது நெருங்கிய நண்பர் ராஜ்பகதூர் தெரிவித்திருந்தார். ரஜினிக்கு அரசியல் ஆசை வந்துவிட்டது என்றும் 20 ஆண்டுகளில் இல்லாத தெளிவு தற்போது வந்துவிட்டதாகவும் விரைவில் கட்சி தொடங்குவது திண்ணம் என்றும் போட்டு உடைத்தார்.

 தொலைபேசியில் சர்வே

தொலைபேசியில் சர்வே

ரஜினி அடுத்துவரவிருக்கும் நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற தேர்தலில் களம் காண்பார் என்று சமிக்ஞைகள் காட்டப்படும் நிலையில், இரவு நேரங்களில் மாவட்ட வாரியாக ரசிகர்களுடன் ரஜினி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரே பேசி வருவதாகக் கூறப்படுகிறது. மாவட்டத்தில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன, தான் அரசியலில் இறங்கினால் மக்களின் வரவேற்பு எப்படியெல்லாம் இருக்கும் என்று இரவு முழுவதும் பேசி வருகிறாராம்.

 கொள்கை என்ன?

கொள்கை என்ன?

அதே சமயம் இதுவரை தான் நடிகனாக மட்டுமே வலம்வந்த நிலையில் தனக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து அரசியலுக்கு ஏற்ப கொள்கைளை வகுக்கும் திட்டத்திலும் இறங்கியுள்ளாராம் ரஜினிகாந்த். மக்கள் அதிகம் பாதிக்கப்படுவது ஊழல் என்ற ஒன்றாலேயே என்பதால் அதனை கையில் எடுத்து அதிரடி திட்டங்களுடன் அரசியல் களம் காணலாம் என்ற திட்டத்தின் வெளிப்பாடாகவே பணம் சம்பாதிக்கும் ஆசையுடன் அரசியலுக்கு வர நினைப்போரை அருகில் கூட வைத்துக் கொள்ளமாட்டேன் என்றதன் பின்னணியாம்.

 நெருக்கும் பாஜக

நெருக்கும் பாஜக

தான் அரசியலுக்கு வருவதாக சொன்ன உடனேயே பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் என்றும், பாஜகவில் இணைய வேண்டும் என்றும் தேசிய தலைவர் அமித்ஷா நேற்று அழைப்பு விடுத்தார். ஆனால் தனிக்கட்சி தொடங்கி மக்கள் மத்தியில் அரசியலில் நுழையவே விரும்பும் ரஜினி பாஜகவின் நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் இரவில் தூக்கம் தொலைத்து திரிவதாகவும் சொல்லப்படுகிறது.

 இளைப்பாறும் ரஜினி

இளைப்பாறும் ரஜினி

அரசியல் டென்ஷனில் உள்ள ரஜினி மன நிம்மதிக்காக அடிக்கடி கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் ஓய்வெடுக்க சென்று விடுவதாகவும் கூறப்படுகிறது. முன்பெல்லாம் எப்போதாவது ரஜினி அங்கே சென்று தனிமையில் ஓய்வெடுப்பாராம், ஆனால் தற்போது விடாத விரட்டு அரசியல் கேள்விகளால் 2 நாட்களுக்கு ஒரு முறை கேளம்பாக்கம் சென்று தனிமையில் சிந்தனை செய்து வருகிறாராம்.

English summary
Superstar Rajinikanth spending his night time with the district fan club members and also taking survey about his entry over phone conversations
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X