For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமேஸ்வரம் மீனவர்கள் 2 வது நாளாக வேலை நிறுத்தம்... நாளொன்றுக்கு ரூ.5 கோடி இழப்பு

Google Oneindia Tamil News

ராமேஸ்வரம் : கச்சத்தீவில் மீன்பிடிக்கும் பாரம்பரிய உரிமையை மீட்டுத் தர வலியுறுத்தி இன்று (சனிக்கிழமை) 2 வது நாளாக ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வர்த்தகம் பாதிக்கக்கப்பட்டுள்ளதால் நாளொன்றுக்கு 5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கச்சத்தீவு உள்ளிட்ட பாக்நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்கும் பாரம்பரிய உரிமையை மீட்டுத்தர வேண்டும், இலங்கை சிறையிலுள்ள 16 மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.

fishing boat

இலங்கை கடற்படை பிடித்துவைத்துள்ள தமிழக மீனவர்களின் 32 படகுகளையும் விடுவிக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று (வெள்ளி) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்லாததையடுத்து, 1,200 படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ராமேஸ்வரம் மீன்பிடிதுறைமுகத்தில் 1200 படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டள்ளன.

இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் 5 கோடி வரையில் வாத்தகம் பாதிக்கப்பட்டள்ளது. 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

English summary
Rameswaram fishermen strike goes for 2nd day. They demand to redeem katchatheevu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X