ரேஷன் கடை ஊழியர் தற்கொலை எதிரொலி.. ரேஷன் ஊழியர்கள் ஸ்டிரைக்... 35,000 ரேஷன் கடைகள் மூடல்!
சென்னை: தமிழகத்தில் ரேஷன் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட காரணத்தினால் 35 ஆயிரம் ரேஷன் கடைகளை மூடி பணியாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை எண்ணூர் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர், எண்ணூரில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த வாரம் தனது வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும், தன்னுடைய கடிதமொன்றில் அதிகாரிகள் அளித்த மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்திருந்தார்.
இளங்கோவன் தற்கொலைக்கு அதிகாரிகளின் நெருக்கடியே காரணம் என்று குற்றம் சாட்டியும், அவரது தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தமிழகத்தில் உள்ள 35 ஆயிரம் ரேஷன் கடைகளை மூடி பணியாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்ததப் போராட்டம் காரணமாக ரேஷன் கடைகள் மூடப்பட்டிருப்பதால் பொதுமக்கள் அவதியுற்றுள்ளனர்.