Return If Possible, முடிந்தால் திரும்பி வந்துவிடுங்கள் கலாம் சார்
சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சார் முடிந்தால் திரும்பி வந்துவிடுங்கள் என்று மக்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கடந்த திங்கட்கிழமை அன்று மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஐஐஎம் கல்வி மையத்தில் மாணவர்களிடையே உரையாற்றுகையில் மயங்கி விழுந்தார். உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மரணம் அடைந்தார்.
கலாமின் மறைவை நினைத்து இந்திய மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
ஆர்.ஐ.பி.
யாராவது இறந்த செய்த அறிந்தால் மக்கள் சமூக வலைதளங்களில் ஆர்.ஐ.பி.(Rest In Peace) அதாவது உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் என்று தெரிவிப்பது வழக்கம்.
கலாம்
அப்துல் கலாம் மறைவை அறிந்த மக்கள் அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று மட்டும் கூறவில்லை அத்துடன் சேர்த்து (Return If Possible) முடிந்தால் திரும்பி வந்துவிடுங்கள் என்று சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.
ஃபேஸ்புக்
அனைவரும் ஆர்ஐபி(ஆத்மா சாந்தியடையட்டும்) என்கிறார்கள் நானும் ஆர்ஐபி என்கிறேன் அதாவது (Return If Possible) முடிந்தால் திரும்பி வந்துவிடுங்கள் என்று மக்கள் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளனர்.
|
ட்வீட்
ஏபிஜெ சாரால் என்னால் எதைப் பற்றியும் ட்வீட் செய்ய முடியவில்லை. ஆர்ஐபி என்றால் ஆத்மா சாந்தியடையட்டும் என்று அர்த்தம். ஆனால் நான் கூறுகிறேன் ஆர்ஐபி என்றால் முடிந்தால் திரும்பி வந்துவிடுங்கள். ப்ளீஸ் என்று வினோவிஜய் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
பிரதான்
நோ கமெண்ட்ஸ்.... முடிந்தால் திரும்பி வந்துவிடுங்கள் கலாம் சார் என்று டாக்டர் கௌரவ் பிரதான் ட்வீட் செய்துள்ளார்.