ஜனனி ஜனனி பாடலைப் பாடி விகடன் தலைவர் எஸ் பாலசுப்பிரமணியத்துக்கு இளையராஜா அஞ்சலி
விகடன் குழுமத்தின் தலைவர் எஸ் பாலசுப்பிரமணியத்தின் வீட்டுக்குச் சென்று அவரது படத்துக்கு இசையஞ்சலி செலுத்தினார் இளையராஜா.
பாலசுப்பிரமணியத்துக்கு மிகவும் பிடித்த ஜனனி ஜனனி பாடலை மனமுருகப் பாடி, அவரது புகழைப் பேசி அஞ்சலி செலுத்தினார் இளையராஜா.
விகடன் குழுமத் தலைவர், தலை சிறந்த பத்திரிகையாளர், விவசாய நிபுணர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பல முகங்கள் கொண்ட எஸ் பாலசுப்பிரமணியன் சில தினங்களுக்கு முன் மரணம் அடைந்தார்.
அவரது உடல் இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கல்வி ஆராய்ச்சிக்காக தானமாக வழங்கப்பட்டது.
அவரது வீட்டுக்கு நேற்று சென்ற இசையமைப்பாளர் இளையராஜா, பாலசுப்பிரமணியனின் படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.
அப்போது, பாலசுப்பிரமணியத்துக்கு மிகவும் பிடித்த ஜனனி ஜனனி.. பாடலை மனமுருகப் பாட, அதைக் கேட்டு பாலசுப்பிரமணியம் குடும்பத்தின் கண் கலங்கினர்.
பின்னர் எஸ் பாலசுப்பிரமணியத்தின் பெருமைகளையும் பெருந்தன்மையையும் புகழ்ந்து பேசினார் இளையராஜா.