For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்.கே.நகரில் போட்டியிட தேர்தல் ஆணையம் உறுதிமொழி தர வேண்டும்: ஈ.வி.கே.எஸ் நிபந்தனை

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தேர்தல் நேர்மையாக நடக்கும் என்று தேர்தல் ஆணையம் உறுதி அளித்தால் மட்டுமே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி முடிவெடுப்போம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிபந்தனை விதித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை அனுமதிக்க மாட்டோம்; பணம் விநியோகம் செய்ய உதவியாக இருக்கமாட்டோம்.

RK Nagar By poll: TNCC to decide on June 3

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் நடந்து கொண்டது போல அதிகாரிகள் நடந்து கொள்ளமாட்டார்கள் என தேர்தல் ஆணையம் உறுதி அளிக்க வேண்டும்.

அப்படி தேர்தல் ஆணையம் உறுதி அளித்தால் மட்டுமே போட்டியிடுவது முடிவு எடுக்கப்படும். தேர்தலில் போட்டியிடுவது குறித்து வரும் ஜூன் 3-ந் தேதி நடக்கும் கட்சி கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

English summary
TNCC will take a call on contesting the keenly watched bypoll to Radhakrishnan Nagar constituency on June 3, party's state President EVKS Elangovan said today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X