For Daily Alerts
Just In
வட போச்சே!! – நங்கநல்லூரில் கவரிங் செயினை அறுத்துச் சென்ற அறிவாளித் திருடர்கள்
சென்னை: சென்னை நங்கநல்லூரில் தங்க செயின் என்று நினைத்து கவரிங் செயினை திருடர்கள் பறித்துக் கொண்டு சென்ற சம்பவம் பெரும் கலகலப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த நங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகலா. இவர் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுக்க சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென ஸ்ரீகலாவின் கழுத்தில் கிடந்த சங்கிலியை பறித்து சென்றனர்.
இதை கண்டதும் அப்பகுதியினர் சத்தம் போட்டனர். ஆனால் ஸ்ரீகலா பதறவே இல்லை. பின்னர் அவரே, "அது தங்கச்சங்கிலி இல்லை. கவரிங் நகை தான்" என்று விளக்கியபோதுதான் அப்பகுதியினர் நிம்மதியடைந்தனர்.
இருந்தாலும் அந்தத் திருடர்களைப் பிடிக்க ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
English summary
Burglers snatched a covering chain from a woman in Nanganallur, Chennai and police are investigating the case.
Story first published: Friday, January 30, 2015, 13:27 [IST]