விழுப்புரம் பூங்காவில் ''பத்தர்'' செல்வத்தின் தலையை துண்டித்த ‘அசால்ட்’ அறிவழகன்.. போலீசில் சரண்
விழுப்புரம்: விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கழுத்தை துண்டாக வெட்டி எடுத்து காந்தி சிலை முன்பு வைத்து விட்டு போலீசில் சரணடைந்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
பிரபல ரவுடி பத்தர் செல்வம் (33). அவர் இன்று காலை இங்குள்ள நகராட்சி பூங்கா விளையாட்டு மைதானத்தில் இறகுப்பந்து விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த இன்னொரு ரவுடியான, கீழப்பெரும்பாக்கத்தைச் சேர்ந்த அறிவழகன், நான்கு பேருடன் வந்து பத்தர் செல்வத்தை சரமாரியாக வெட்டினார்.
பின்னர், தலையை துண்டித்து எடுத்துக் கொண்டு, அருகில் இருந்த காந்திசிலை முன்பு வைத்துவிட்டு, டவுன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அதிகாலையில், நகரின் மையப்பகுதியில் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.