For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேலத்தில் ரூ.25 கோடி மதிப்பிலான பச்சை மரகதலிங்கம் மீட்பு.. பெண் உள்பட 5 பேர் கைது

சேலம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.25 கோடி மதிப்புள்ள பச்சை மரகதலிங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சேலம்: சேலம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.25 கோடி மதிப்புள்ள பச்சை மரகதலிங்கத்தை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒரு பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் அருகே தாரமங்கலம் வழியாக, பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத லிங்கம் கடத்தப்படுவதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் தலைமையில் தாரமங்கலம் அருகே மாறு வேடத்தில் போலீசார் முகாமிட்டு இருந்தனர்.

Rs.25 crores worth maragatha linga recovered

அப்போது அங்குள்ள பால்பண்ணை என்ற இடத்தில் வந்துகொண்டிருந்த காரை மறித்து போலீசார் சோதனையிட்டனர். அதில் ஏழு கிலோ எடை கொண்ட பச்சை மரகதலிங்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த மரகதலிங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.25 கோடி இருக்கும் என ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தெரிவித்தார்.

இதுதொடர்பாக காரில் பயணம் செய்த ஒரு பெண் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை தாரமங்கலம் காவல்நிலையத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
Rs.25 crores worth maragatha linga recovered in salem
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X